வெள்ளி, 12 அக்டோபர், 2012

கோலப்பொடி


அதிகாலையில் தண்ணீர்
தெளித்து துப்புறபடுத்தி விட்டு
என்னை வைத்து
புள்ளிகள் இட்டாய்!
புள்ளிகள் அனைத்தும்
இணைத்து விட்டாய் !
வித விதமாய் கோலங்கள் போட்டு
மலர்கள் வரி துவினாய் !'
சூரியன் மறையும் தருணத்தில்
என்னை துடைப்பத்தால்
துடைத்து விட்டாயே

தலைவலி


உன் ''தைல விரல்களுக்காக''
என் தலைவலி தவிக்கின்றது...

காதல் காயங்கள்


காதல் காயங்கள்
உங்கள் உயிர்
உங்களை விட்டு பிரிவதை
நீங்கள் நேரில்
பார்த்திருக்கிறீர்களா ?
காதலித்து பிரிந்து பாருங்கள்
தெரியும்,
அந்த அனுபவம்
உங்களுக்கு வேண்டாம்,
அது மிகவும் கொடுமையானது.

வெட்கம்


நீ வெட்கம் மறக்கிற
சிலபொழுதுகளை நினைத்து
பிறகு வெட்கப்படுவாயே!
வார்த்தைகளுக்குள் வசப்படாத
அழகிய கவிதை அது!

தோழியாய் வரபோகும் மனைவி


நெஞ்சுக்குள் சின்ன சின்னதாய் ஒரு ஆசை உண்டு...........
இது கவிதை அல்ல........
நான் கனவுகளால் கோர்த்த மாலை,
...என் ஆசைகள் எல்லாம் என்ன தெரியுமா
...கொட்டும் மழையில் ஒரே குடையில் உன் தோள்
உரசி நடக்கஆசை............
உன் சுட்டு விரல் பிடித்து.........
உன் பாதம் தொடர ஆசை
உன் கால்நகம் வெட்டி விட
கையில் மருதானி வைத்து விட ஆசை...........
உனக்காய் ஒரு கவிதை நான் எழுதி அதை நீ வாசிக்க
நான் கேக்க ஆசை...........
உன் கைகுட்டை திருட ஆசை அதை என் கைபைல்
எப்போதும் வைத்திருக்க ஆசை....... உனக்காக காத்ருக்க ஆசை.......
கால தாமதமாய் வரும். நீ என் மன்னிப்புக்கு கை கட்டி நீக்க ஆசை.......
நீ சொல்லும் சின்ன சின்ன பொய்கள் எப்போதும் கேக்க ஆசை...........
நமக்குள் சின்ன சின்னதாய் வரும் சண்டைகள் ஆசை...........
அந்த சண்டைக்குள் பின் வரும் சமதபொனம் ஆசையோ ஆசை...........
உன் விரல் மல்லிகை பூ தலை சூட ஆசை...........

உன்னைக் காதலிக்கவே


உன்னை விட்டுவிட்டு
வேறு யாரையேனும் காதலிக்கத்துவங்கிவிடுவேனோ
என்கிற பயமெல்லாம் உனக்கு வேண்டாம்!
உன்னைக் காதலிக்கவே இந்த ஆயுள் போதாது
என்று நினைக்கிறவன் நான்!
                                                                        smdsafa.net

கண் தானம்


உனது கண்களை
ஒரு சின்னஞ்சிறு
பெண்ணுக்கே
தானமாக
வழங்க வேண்டும் என்று
பதிவு செய்
அந்தக்கண்கள்
அடுத்த தலைமுறையில்
என்னை மாதிரி
இன்னும் ஒரு காதலன்
உருவாகட்டும் !                         smdsafa.net

ஆசைகைளை துறந்து


அன்று
கண்ணீர் திர்நததால் கண்கள்
இரத்தம் தர துடிகின்றதா ?
அன்பினை தொலைத்து விட்டு
நெஞ்சம் கோபத்தை கொப்பளிக்கும்
நித்திரையில் தொலைத்து விட்ட
நினைவுகளை தேடுகின்றேன்
இன்று
ஆசைகைளை துறந்து விட்டு
ஆண்டி என்றே மாறிவிட்டேன்..                       smdsafa.net

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உங்கள் வரவிற்காய்


பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்..

எல்லா உயிரும் ஒன்றே


மாடும் இல்லை
அச்சாணியும் இல்லை
பூமி இங்கே சுற்றுதடா ..

விறகும் இல்லை
கரியும் இல்லை
வானில் சூரியன் எரியுதடா ..

உருவம் இல்லை
வடிவம் இல்லை
காற்றும் இங்கே அலையுதடா..

நாளும் இல்லை
கிழமையும் இல்லை
வானில் வெள்ளி முளைக்குதடா..

நீயும் இல்லை
நானும் இல்லை
எல்லா உயிரும் ஒன்றேயடா ...

என் உறவே நீ எங்கே


பாவை உன்னை பார்த்த பின்னே
 பார்வையையே நான் இழந்தேன்!

பாவமென தெரிந்த பின்னும்
பாவி உன்னை நினைத்து விட்டேன்!!

பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!

அழிக்க முயன்றேன்


அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..