மாடும் இல்லை
அச்சாணியும் இல்லை
பூமி இங்கே சுற்றுதடா ..
விறகும் இல்லை
கரியும் இல்லை
வானில் சூரியன் எரியுதடா ..
உருவம் இல்லை
வடிவம் இல்லை
காற்றும் இங்கே அலையுதடா..
நாளும் இல்லை
கிழமையும் இல்லை
வானில் வெள்ளி முளைக்குதடா..
நீயும் இல்லை
நானும் இல்லை
எல்லா உயிரும் ஒன்றேயடா ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக