அனைவரும் எழுதலாம்....
அதிகாலைப்பொழுதுபகலவன் பட்டொளி பொன்னிற பந்தாய் குளந்தனில்பசுமை புல்நுனியில்ஆயுள் கால நீடிப்பாய்அச்சமோடு விற்றிருக்கும் பனி .ஆழ்ந்து உறங்கும் புட்கள் ஆரவாரமாய் கண்விழிப்பு .இதழ் விரி மலரை இன்பத்துடன் நாடும் வண்டு .தூக்கத்திற்கு துக்கமாய் ஆதிகாலை செவிபாயும் ஆலயமணி .இடைவளைந்து இல்ல முற்றத்தில் கோலமிடும் மங்கை இன்பச்சிரிப்போடு முதுகில் பாரமேந்தி பயிலகம் செல்லும் குழந்தை .இருளில் மின்னிய தெரு ஓரவிளக்குகள் அணைக்க ஆளின்றி மங்கிய நிலையில் .உணவளிக்கும் உயரிய பணிக்காய் உடலாடையின்றிஏர்கலப்பை ஏந்தி வீரநடை பயிலும் உழவன் .குடிசை மீதேறி பெட்டைக்கு குரலெழுப்பும் சேவல் .அலுவலகப் பணியால் அயர்ந்துறங்கும் தந்தையை தட்டியெலுப்பும் குழவி .இப்பகல் இன்பப்பகலாய் புலரதென பொத்திய போர்வையை விலக்கிவீதியை விழித்துப்பார்க்கும் வீதிப் பிச்சைக்காரன் . இளையகவி
அதிகாலைப்பொழுது
பதிலளிநீக்குபகலவன் பட்டொளி
பொன்னிற பந்தாய் குளந்தனில்
பசுமை புல்நுனியில்
ஆயுள் கால நீடிப்பாய்
அச்சமோடு விற்றிருக்கும் பனி .
ஆழ்ந்து உறங்கும் புட்கள்
ஆரவாரமாய் கண்விழிப்பு .
இதழ் விரி மலரை
இன்பத்துடன் நாடும் வண்டு .
தூக்கத்திற்கு துக்கமாய்
ஆதிகாலை செவிபாயும்
ஆலயமணி .
இடைவளைந்து இல்ல முற்றத்தில்
கோலமிடும் மங்கை
இன்பச்சிரிப்போடு
முதுகில் பாரமேந்தி
பயிலகம் செல்லும் குழந்தை .
இருளில் மின்னிய
தெரு ஓரவிளக்குகள்
அணைக்க ஆளின்றி
மங்கிய நிலையில் .
உணவளிக்கும் உயரிய பணிக்காய்
உடலாடையின்றி
ஏர்கலப்பை ஏந்தி
வீரநடை பயிலும்
உழவன் .
குடிசை மீதேறி
பெட்டைக்கு குரலெழுப்பும்
சேவல் .
அலுவலகப் பணியால்
அயர்ந்துறங்கும் தந்தையை
தட்டியெலுப்பும் குழவி .
இப்பகல் இன்பப்பகலாய்
புலரதென
பொத்திய போர்வையை விலக்கி
வீதியை விழித்துப்பார்க்கும்
வீதிப் பிச்சைக்காரன் .
இளையகவி