ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

உங்கள் வரவிற்காய்


பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்..

எல்லா உயிரும் ஒன்றே


மாடும் இல்லை
அச்சாணியும் இல்லை
பூமி இங்கே சுற்றுதடா ..

விறகும் இல்லை
கரியும் இல்லை
வானில் சூரியன் எரியுதடா ..

உருவம் இல்லை
வடிவம் இல்லை
காற்றும் இங்கே அலையுதடா..

நாளும் இல்லை
கிழமையும் இல்லை
வானில் வெள்ளி முளைக்குதடா..

நீயும் இல்லை
நானும் இல்லை
எல்லா உயிரும் ஒன்றேயடா ...

என் உறவே நீ எங்கே


பாவை உன்னை பார்த்த பின்னே
 பார்வையையே நான் இழந்தேன்!

பாவமென தெரிந்த பின்னும்
பாவி உன்னை நினைத்து விட்டேன்!!

பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!

அழிக்க முயன்றேன்


அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..