பாலை வனமாய் இருந்த
என் வாழ்வை
சோலை வனமாக்க
மழை பெய்தது போல்
விழுந்த மழைத்துளிகள்
என் நண்பர்கள் நண்பிகள்
என்றும் இந்த சோலை
உங்கள் வரவிற்காய்
எதிர் பார்த்து காத்திருக்கும்..
அவள் நினைவுகளை
கண்ணீர் விட்டு அழிக்க முயன்றேன்,
பின் தான் அறிந்தேன்...
கண்ணீர் விட்டு அழிக்க
அவள் நினைவுகள் கையில் தீட்டிய
ஓவியம் இல்லை..
என் கைகளில் ஓடும் ரேகை என்று..
என் காலம் வரை என்னுள்..