பேசா வார்த்தைகள் பேசும் விழிகள் தனிமைச்சிரிப்பு இயற்கை இரசிப்பு உணவு மறுப்பு தூக்கத் துறவு பாடத் தொலைப்பு பெற்றோர் பாச வெறுப்பு தனிமை இன்பம் காதலின் மந்திரம் பேச்சில் தந்திரம் மயக்கம் பிரிவில் துக்கம் . மாறுச்சட்டை மகத்துவம் . இருமுறைக் குளியல் . இடை இடையே சிகை அலங்காரம் . எப்போதும் சிரித்த முகம் . பகல் பொழுது இனிமை . இரவு பொழுது வெறுமை பிடித்த நாள் பிப்ரவரி -14 வெறுத்த நாள் விடுமுறை நாள் . கன்னித்தீவாய் அவள் பின்னால் நாட்டம் அவளோ ?தப்பி ஓட்டம் கைப்பேசி செவிமாட்டியாய் இடமாற்றம் . வைட்டமின் ஏ குறைந்தால் போல் தோன்றுபவை எல்லாம் அவையே போதல் . தூக்கத்தில் புலம்பல் . தலையணை இறுக்கம் . கரம் தொட தாமரை இலைநீர்போல் இதழ்பட இன்ப பகல் கனவு . பேப்பரும் ,பேனாவுடன் கவிதைப் போராட்டம் கரம் பட்ட கைக்குட்டை அடிக்கடி முகம் உரசல் தன் பெயர் மறத்தல் அவள் பெயர்க் கேட்டு உள்ளத் தடுமாற்றம் கடவுச் சீட்டு இல்லாது மனப்பறவையாய் வெளிநாட்டுப் பயணம் உமது முகம் பார்த்தே கண்ணாடி தோய்தல் . கோடைக்காலம் குளிர்மையாகும் கார்காலம் கடும் வெப்பமாகும் அவள் முகம் உரசும் ஒற்றைத் தலைமுடியாய் பிறக்க ஆசைக் கொள்வாய் அவளது குரல் ஒலி குயில்பாடல் கர வளையொலி மேளதாளம் பாத கொலு ஒலி சங்கீதக் கிர்த்தனை காத்திருப்பு சுகம் என்பாய் இன்னல் இன்பமாகும் இன்பம் துன்பமாகும் ........................
ஒருதலை ..............?
பதிலளிநீக்குபேசா வார்த்தைகள்
பேசும் விழிகள்
தனிமைச்சிரிப்பு
இயற்கை இரசிப்பு
உணவு மறுப்பு
தூக்கத் துறவு
பாடத் தொலைப்பு
பெற்றோர் பாச வெறுப்பு
தனிமை இன்பம் காதலின் மந்திரம்
பேச்சில் தந்திரம் மயக்கம்
பிரிவில் துக்கம் .
மாறுச்சட்டை மகத்துவம் .
இருமுறைக் குளியல் .
இடை இடையே சிகை அலங்காரம் .
எப்போதும் சிரித்த முகம் .
பகல் பொழுது இனிமை .
இரவு பொழுது வெறுமை
பிடித்த நாள் பிப்ரவரி -14
வெறுத்த நாள் விடுமுறை நாள் .
கன்னித்தீவாய்
அவள் பின்னால் நாட்டம்
அவளோ ?தப்பி ஓட்டம்
கைப்பேசி செவிமாட்டியாய் இடமாற்றம் .
வைட்டமின் ஏ குறைந்தால் போல்
தோன்றுபவை எல்லாம் அவையே போதல் .
தூக்கத்தில் புலம்பல் .
தலையணை இறுக்கம் .
கரம் தொட தாமரை இலைநீர்போல்
இதழ்பட
இன்ப பகல் கனவு .
பேப்பரும் ,பேனாவுடன் கவிதைப் போராட்டம்
கரம் பட்ட கைக்குட்டை
அடிக்கடி முகம் உரசல்
தன் பெயர் மறத்தல்
அவள் பெயர்க் கேட்டு உள்ளத் தடுமாற்றம்
கடவுச் சீட்டு இல்லாது
மனப்பறவையாய் வெளிநாட்டுப் பயணம்
உமது முகம் பார்த்தே
கண்ணாடி தோய்தல் .
கோடைக்காலம் குளிர்மையாகும்
கார்காலம் கடும் வெப்பமாகும்
அவள் முகம் உரசும்
ஒற்றைத் தலைமுடியாய்
பிறக்க ஆசைக் கொள்வாய்
அவளது குரல் ஒலி
குயில்பாடல்
கர வளையொலி மேளதாளம்
பாத கொலு ஒலி
சங்கீதக் கிர்த்தனை
காத்திருப்பு சுகம் என்பாய்
இன்னல் இன்பமாகும்
இன்பம் துன்பமாகும் ........................
இளையகவி